தொடர் - 1“யா அத்தஹாக்! (சிரிப்பழகரே!)”
அப்படித்தான் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.
அழைத்தவர் வேறு யாருமல்லர்! நம் அன்னை ஆயிஷா அவர்கள்!
ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.
அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!
அவர்தாம் நம் இனிய தலைவர் நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
அழைத்தவர் வேறு யாருமல்லர்! நம் அன்னை ஆயிஷா அவர்கள்!
ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.
அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!
அவர்தாம் நம் இனிய தலைவர் நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
ஜரீர் இப்னு சமூரா (ரலி) அறிவிக்கின்றார்:
“நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, என் ஒவ்வொரு சந்திப்பிலும் நபியவர்களைப் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகம் உடையவர்களாகவே நான் கண்டிருக்கிறேன்.”
நகைச்சுவையின் வரையறை:
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணல் அவர்கள் நகைச்சுவையின் இலக்கணத்தையும் அதன் எல்லையையும்கூட சரியாக வரையறுத்துக் காட்டினார்கள்.
“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற மூஃமின்களின் அன்னை ஆய்ஷா அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும் அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள்.
இதன் விளக்கமாவது, நாயகம் அனுமதித்த நகைச்சுவை என்பது மிகையாக ஜோடனை செய்யப்பட்டதாகவோ அல்லது சகமனிதனின் கண்ணியத்தைக் குலைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதாம்!
“நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, என் ஒவ்வொரு சந்திப்பிலும் நபியவர்களைப் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகம் உடையவர்களாகவே நான் கண்டிருக்கிறேன்.”
நகைச்சுவையின் வரையறை:
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணல் அவர்கள் நகைச்சுவையின் இலக்கணத்தையும் அதன் எல்லையையும்கூட சரியாக வரையறுத்துக் காட்டினார்கள்.
“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற மூஃமின்களின் அன்னை ஆய்ஷா அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும் அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள்.
இதன் விளக்கமாவது, நாயகம் அனுமதித்த நகைச்சுவை என்பது மிகையாக ஜோடனை செய்யப்பட்டதாகவோ அல்லது சகமனிதனின் கண்ணியத்தைக் குலைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதாம்!
(இன்றைய ஆங்கில எழுத்தாளனும் அல்லாஹ்வின் தூதரின் கூற்றை இவ்வாறு வழிமொழிகின்றான்: "There is more logic in humor than in anything else. Because, you see; humor is truth. ~Victor Borge, London Times.")
இன்னும் தெளிவாகச்சொல்வதென்றால், தமாஷ் என்ற பேரில், அடுத்தவனைச் சிரிக்கவைப்பதற்காகச் சின்ன விஷயத்தை மிகைப்படுத்தி, மெருகூட்டி, பொய் கலந்துபேசி, மற்றவர் மனம்தனை நோகடிப்பதை நபியவர்கள் வெறுத்தார்கள். மேலும், “பிறரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொன்னவன் அழிந்தான்” என்றார்கள் (திர்மிதீ).
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்
No comments:
Post a Comment